9 ஏப்., 2015

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை 
விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி 
இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். பள்ளிக்கூடங்கள் தமிழ்நாடு 
முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750
நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5 ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6 
ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 6 
லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலைபார்க்கிறார்கள்.
 ஒரு கோடியே 40 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.பிளஸ்-2 தேர்வு 
கடந்த மார்ச் மாதம் தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. 
தேர்வு கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. அந்த தேர்வு 
நாளை (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைகிறது. 
ஏற்கனவே பிளஸ்-1 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. 6-வது முதல் 8-வது வகுப்பு
வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு வருகிற 20-ந் தேதிமுடிவடைகிறது. 
ஜூன் 1ஆம் தேதி திறக்கின்றன ஆனால் 22ஆம் தேதி அரசு உயர்நிலைப்பள்ளிகள்,
அரசு மேல்நிலைப்பள்ளிகள் முடிவடைகின்றன. 23ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி 
முடிய கோடை விடுமுறையாகும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகளுக்கு 30ஆம் தேதி வரைபள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ளன.
 அந்த பள்ளிக்கூடங்களுக்கு மே மாதம் 1ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி
 வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கோடை 
விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1ஆம் தேதி திறக்கின்றன. இந்தத் தகவலை 
பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.